மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது..! - பொள்ளாச்சியில் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் PRK குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி,

பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி கலந்துகொண்டார். பொதுகூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.



திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...