மே தினத்தன்று உடுமலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை - வைரல் வீடியோ

உடுமலை கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் மே தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மே தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் உடுமலையில் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை கள்ளச் சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக கல்பனா தியேட்டர் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை, அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு அரசு மதுபான கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி-க்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.



இதற்கிடையில் கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...