மே தினத்தன்று உடுமலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை - வைரல் வீடியோ

உடுமலை கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் மே தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மே தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் உடுமலையில் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை கள்ளச் சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக கல்பனா தியேட்டர் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை, அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு அரசு மதுபான கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி-க்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.



இதற்கிடையில் கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...