மே தினத்தன்று உடுமலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை - வைரல் வீடியோ

உடுமலை கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் மே தினத்தன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மே தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் உடுமலையில் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை கள்ளச் சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக கல்பனா தியேட்டர் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை, அர்பன் பேங்க், தாராபுரம் ரோடு அரசு மதுபான கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி-க்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர்.



இதற்கிடையில் கல்பனா திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடை பகுதியில் மே தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...