பல்லடத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட 2 பேருந்துகள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

பல்லடம் பேருந்து நிலையம் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து மீது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: பல்லடத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்றுமுன்தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து வலது புறமிருந்த பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் நுழைய திரும்பியுள்ளது.

அப்போது கோவையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலிருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...