பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களுக்கு தர்பூசணி பழம், குடிநீர், மோர் வழங்கப்பட்டன.


திருப்பூர்: பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.



கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.



பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...