கோவை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.7.50 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த சண்முகசுந்தரம், பூளுவம்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வந்த போது, கத்தியை காட்டி ரூ.7.50 லட்சம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பூளுவம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.7.38 லட்சம் மற்றும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 3 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணம், செல்போனை கொள்ளைடித்து சென்றனர். இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் ஊழியருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர் இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...