கோவை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.7.50 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த சண்முகசுந்தரம், பூளுவம்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வந்த போது, கத்தியை காட்டி ரூ.7.50 லட்சம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பூளுவம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.7.38 லட்சம் மற்றும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 3 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணம், செல்போனை கொள்ளைடித்து சென்றனர். இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் ஊழியருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர் இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...