கோவையில் 1000ம் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டம், வங்கி சேவை பாதிப்பு.


நிதிதுறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகுதியாக வங்கி ஊழியர் சங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் பிப்ரவரி 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுக்கபட்டது. இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த 1000ம் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் கூறும்போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வூதிய பலனுக்கு வருமான வரி முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும், உயிர் நீத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு வங்கிகளை தனியார் மையமாகும் கொள்கையை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடு போவதாக தெரிவித்தார். இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...