கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போன் பறிப்பு - இளைஞர்கள் 3 பேர் கைது!

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஷேக் மொய்தீன் என்பவரை கத்தியால் தலையில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள் மூவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகேயுள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மொய்தீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரது செல்போனை கேட்டுள்ளனர்.

அப்போது அவர் செல்போனை தர மறுத்ததால், அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஷேக் மொய்தீன் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த ஷேக் மொய்தீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனிடையே ஷேக் மொய்தீன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், ஷேக் மொய்தீனை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கவுண்டம் பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியைச் சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...