கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ரவுண்டானாக்கள்..! - காவல் ஆணையர் தகவல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து ஏற்கனவே இருந்த 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன வகை போக்குவரத்து சிக்னலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

சிக்னல் கம்பம் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் ஏற்கனவே 62 போக்குவரத்து சிக்னல்கள் இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முழுவதும் ஆராய்ந்து 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் புதிய நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறைந்திருப்பதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களே நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இது போல பல்வேறு புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது போன்று அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...