கோவையில் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து ஆலோசனை!

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலக‌த்தில்‌ ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவையில் முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து சமுதாய கூட்டாண்மை பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பங்களிப்பு பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையா்‌ பூபால்ரெட்டி‌, கோவை‌ மாநகர காவல்‌ ஆணையா்‌ பாலகிருஷ்ணன்‌‌, கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளா்‌ பத்ரிநாராயணன்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டத்தின்‌ மூலமாக பள்ளி கூடங்கள்‌ மேம்படுத்துதல்‌, பொது சுகாதார மையம்‌ அமைத்தல்‌, கற்றல்‌ மையங்கள்‌ அமைத்தல்,‌ அங்கன்வாடி மையம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்‌, சமுதாயக்‌ கூடம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்.

பூங்காக்கள்‌ அமைத்தல்‌, பொழுதுபோக்கு மற்றும்‌ விளையாட்டு வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, உடற்பயிற்சி கூடம்‌ அமைத்தல்‌, பள்ளி, மருத்துவமனைகள்‌ அருகே கண்காணிப்பு கேமராக்கள்‌ அமைத்தல்‌ போன்ற திட்டங்களை கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த திட்டங்களின் மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக மூன்றில்‌ ஒரு பங்கு தொகை (33%) காசோலையாக வழங்கினால்‌ மீதமுள்ள மூன்றில்‌ இரண்டு பங்கு தொகை (67%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌.

கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்திட மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக பங்கு தொகை (50%) காசோலையாக வழங்கினால்‌, மீதமுள்ள பங்கு தொகை (50%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, 100% பங்களிப்பாகவும்‌ நிதியுதவி வழங்கலாம்‌ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022-23ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில்‌ ரூ.4.41 கோடி வசூலித்து, இலக்கை விட அதிகமாக பொதுமக்களிடமிருந்து பங்களிப்பு பெறப்பட்டது.

2023-24-ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. முழு இலக்கை அடைய அனைவரும்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக குறிப்பிட்டனர்.

மேலும்‌, காவல்துறை சார்பில்‌ இரு சக்கர மின்சார வாகனங்கள்‌ வாங்குதல்‌, நவீன சோதனை சாவடிகள்‌ அமைத்தல்‌, முக்கிய இடங்களில்‌ உள்ள வாகன நிறுத்தங்களில்‌ Free Lift வசதி, சி.சி.டிவி. கேமராக்கள்‌ பொருத்துதல்‌ உள்ளிட்ட பணிகளுக்கு பங்களிப்பு நிதி வழங்க மாநகர காவல்‌ ஆணையர்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ ஆகியோர்‌ கேட்டுக்‌ கொண்டனர்‌.

எனவே, மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள்‌, நல்வாழ்வு சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ ஆகியோர்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தாராளமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப் கேட்டுக்கொண்டார்‌.

இக்கூட்டத்தில்‌ வருமான வரித்துறை இணை ஆணையர்‌ ஸ்ரீவிஜய்‌‌, வருமான வரித்துறை துணை ஆணையர்‌ கார்த்தி, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா‌, மாநகர‌ பொறியாளர் இளங்கோவன்‌, தொழில்‌ நிறுவன பிரநிதிகள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...