கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கிய மாநகராட்சி ஆணையர்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ வாரம்தோறும்‌ புதன்கிழமை சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கூட்டத்தில்‌ 400 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.20,000‌ வீதம்‌ மொத்தம்‌ ரூ.80 லட்சத்திற்கான வங்கி கடனுதவியை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌‌ வழங்கினார்


கோவை: கோவையை சேர்ந்த 400 சாலையோர வியாபாரிகளுக்கு 80 லட்சம் மதிப்பிலான கடனுதவியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வழங்கினார்.

சாலையோர வியாபாரிகள்‌ மேம்பாட்டு‌ திட்டத்திற்கு ஒன்றிய அரசின்‌ PMSVANidhi திட்டம் (SUVI)செயல்படுத்தப்பட்டது. கோவை‌ மாநகராட்சியில்‌ 6,169 சாலையோர வியாபாரிகள்‌ கண்டறியப்பட்டு அவர்களுக்கு 2018ஆம்‌ ஆண்டு சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசின்‌ மூலம்‌ 2019- 2020-ம்‌ ஆண்டு கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. மேலும்‌ 2020-ல்‌ கூடுதலாக 11‌,000 சாலையோர வியாபாரிகளை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு SUSV திட்டத்தின்‌ மூலம்‌ ரூ.10 ஆயிரம்‌ வட்டி மானியத்துடன்‌ வங்கி கடன்‌ வழங்கப்பட்டது.

2021-ல்‌ மேலும்‌ கூடுதலாக 4,450 இலக்கு நாணயிக்கப்பட்டு சாலையோர வியாபாரிகள்‌ கண்டறியப்பட்டு மொத்தம்‌ 21,619 சாலையோர வியாபாரிகளுக்கு கடன்‌ வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கோவை‌ மாநகராட்சியில் இருந்து சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுக்காக வங்கிகளுக்கு பரிந்துரை கடிதம்‌ வழங்கப்பட்டது. இதுவரை 10,143 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000‌ வங்கி கடன்‌ வழங்கப்பட்டுள்ளது.

முதல்‌ தவணை கடன்‌ பெற்றவர்கள்‌ கடன்‌ தொகை முழுவதையும்‌ கட்டி முடித்த 2,581 சாலையோர வியாபாரிகளுக்கு இரண்டாம்‌ தவணையாக ரூ.20 ஆயிரம்‌ நேரடியாக வங்கிகளின்‌ மூலமாக வழங்கப்பட்டது. மேலும்‌, 2ம்‌ தவணை கட்டி முடித்த 43 சாலையோர வியாபாரிகளுக்கு 3ம்‌ தவணையாக ரூ.50 ஆயிரம்‌ நேரடியாக வங்கிகளின்‌ மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியை மேலும்‌ துரிதப்படுத்த ஒன்றிய அரசின்‌ வழிகாட்டுதலின்படி வாரம்‌ தோறும்‌ புதன்‌ கிழமை சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனையொட்டி நேற்றைய தினம் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள்‌ நாள்‌ (Street Venders Day) கூட்டத்தில்‌ 400 சாலையோர வியாபாரிகளுக்கு தலா 20 ஆயிரம்‌ வீதம்‌ மொத்தம்‌ ரூ.80 லட்சம்‌ கடனுதவியாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வழங்கினார்‌.



இந்நிகழ்வில்‌ உதவி ஆட்சியர் (பயிற்சி) செளமியா ஆனந்த்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ சிவகுமார்‌‌, நகர்‌ நல அலுவலர்‌ தாமோதரன்‌, மாநகராட்சி சாலையோர வியாபாரிகள்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ பாலசுந்தரம்‌ மற்றும்‌ சாலையோர வியாபாரிகள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...