உடுமலை அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு - கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அடுத்த விருகல்பட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் மூன்று கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது,

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் அடமான கடன் இருப்புத் தொகையில் அதிமுகவை சேர்ந்த தலைவர் பிரகாஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் கீதா ஆகியோர் பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பேசி விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறினர்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வந்து இன்று விசாரணை துவக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் செலுத்திய பணத்தில் 3 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...