தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - பரபரப்பு!

புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்கத்தின் சட்டப்பேரவையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறி, ஜாக்டோ ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,

அன்பில் மகேஷ் ஆகியோர் கூறினர். ஆனால் அது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றி விட்டதாக அரசு ஊழியர்கள்குற்றம்சாட்டினர்.

இதேபோன்று மூலனூர், குண்டடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...