தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை - தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டம சோதாவை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவரை பணியில் இருந்தபோது, திட்டமிட்ட கொலைவெறி தாக்குதலால் உயிரிழந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்க வட்டத் தலைவர் குப்புராஜ்,தலைமையில் வட்ட செயலாளர் கனகராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மணல் கடத்தல் குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் புகார் அளித்த நிலையில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் அரிவாளைக் கொண்டு தலை உடல், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி துடிதுடித்து இறந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் நீத்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் மீதான இந்தத் தாக்குதலை, கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வருவாய் கிராம ஊழியர்களும் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல், ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும்,



பொது அமைதிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதி தாராபுரத்தை சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுத்துறை சங்கங்களும், துறை வாரி சங்கங்களும், பொதுமக்களும் முழு ஆதரவு அளித்து, அரசு ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் செய்து ஆணையாக வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்திட ஆவண செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...