பொள்ளாச்சி அருகே தொடர் செயின் பறிப்பு - 13 சவரன் நகையுடன் தூத்துக்குடிப் பெண் கைது!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் 3 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் சிவபாக்கியம் மற்றும் துளசி அம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி கௌதமி (வயது 36) என்பவர் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கௌதமி, மேலும் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கௌதமிடமிருந்து 13 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...