காசி தமிழ்சங்க யாகத்தில் பங்கேற்ற தாராபுரம் ஆன்மீகக் குழு - இயமலை, ரிஷிகேஷ்-க்கும் சுற்றுப்பயணம்!

தாராபுரத்திலிருந்து முதல் முதலாக 40 பேர் கொண்ட குழு, காசி தமிழ் சங்க ஆன்மீக யாத்திரை சென்றுவந்துள்ளது. சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் சென்ற இந்தக் குழுவில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காசி தமிழ் சங்கம் குழுவின் தலைவர் சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் 40 பேர் கொண்ட குழு முதன் முதலாக காசி தமிழ் சங்கம் ஆன்மிக யாத்திரை சென்றது.

இந்த குழுவினர் கடந்த 15-ந் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் ரிஷிகேஷ் பகுதியான இமயமலைக்கு சென்றனர். பின்னர் கங்கை நதியில் புனித நீராடினர். பிறகு காசி தமிழ் சங்க யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்தனர்.

பிறகு தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக கங்கை நதியின் புனித நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டு வந்தனர். ஆன்மிக பயணத்தின் போது இமயமலை, ரிஷிகேஷ், ஹரித்துவார், புது டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தனர்.

காசி தமிழ் சங்கம் யாகத்தில் தாராபுரத்தில் இருந்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் செல்வா பழனிச்சாமி, அ.தி.மு.க. தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வகுமார், த.மா.கா.வட்டார தலைவர் காளிதாஸ், கொங்கு முன்னேற்ற கழக நகர செயலாளர் சின்னசாமி, ரோட்டரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், மல்லி ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் அர்சுணன் உள்ளிட்ட 40 பேர் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...