கோவையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.39.30 கடனுதவி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.


கோவை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இக்கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் ராமச்சந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஊரக தொழில்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும், உலக வங்கி நிதியுதவுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



புதிய தொழில்களை உருவாக்கவும் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 30% இணை மானியத்துடன் கூடிய கடன் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.39.30 இலட்சம் மதிப்பிலான 30% இணை மானியத்துடன் (11.79 லட்சம்) கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டது.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...