கோவையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு கண்ணீர் அஞ்சலி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...