கோவையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு கண்ணீர் அஞ்சலி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...