ஆன்லைன் முதலீடு எனக்கூறி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி!

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி, கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் 5.60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டன் கணபதி அருகேயுள்ள வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (26). ஐ.டி.ஊழியரான இவர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

தங்களது நிறுவனம் குறித்த யூடியூப் வீடியோவில் லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் பல்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.

பின்னர் தான், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்மநபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...