உடுமலை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நடைபாதை - உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய நடைபாதையின் தரைப்பகுதி மற்றும் கைப்பிடி சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றது.

இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது.



பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாமல் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடியானது பல மாதங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.



மேலும் நடைபாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதுமக்களுக்காக தொடங்கப்படுகின்ற எந்த ஒரு சேவையும் திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...