கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - கோவையில் 3 பேர் கைது!

கோவை வீரப்பனூர் அருகே இரு சக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவை - கேரளா எல்லையான வாளையார், மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, வேலந்தாவளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு ஓலப்பதி சாலை வீரப்பகவுண்டனூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதேபகுதியில் தலா 75 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35), மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது41) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கோவையில் பல்வேறு பகுதிகளில் மலிவான விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரஜோஸ் என்பவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதையடுத்து மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...