பணியிடமாற்றம் ஆகும் அதிகாரிக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்த மக்கள்


கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் சாலைகளில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வீட்டு மனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இவர்கள் மனு அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கும், மாவட்ட வருவாய் அலுவலரான கிருஸ்துராஜும் நேரில் சென்று அம்மக்களின் நிலையை பார்த்து அவர்களில் 18 பேருக்கு இடிகரை பகுதியில் பட்டா வழங்கினர். இதில், தற்போது குடியிருப்பு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜும் புதன்கிழமை பணியிடமாற்றம் ஆக இருக்கிறார்.

இதனையொட்டி கிருஸ்துராஜுக்கு குறவர் இன மக்கள் தாங்கள் செய்த அழங்கார கூடைகளுடன் பூங்கொத்தை கொடுத்து நன்றி செலுத்தியதோடு, அவரை மீண்டும் கோவையிலேயே பணிமேற்கொள்ள வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...