பணியிடமாற்றம் ஆகும் அதிகாரிக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்த மக்கள்


கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் சாலைகளில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வீட்டு மனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இவர்கள் மனு அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கும், மாவட்ட வருவாய் அலுவலரான கிருஸ்துராஜும் நேரில் சென்று அம்மக்களின் நிலையை பார்த்து அவர்களில் 18 பேருக்கு இடிகரை பகுதியில் பட்டா வழங்கினர். இதில், தற்போது குடியிருப்பு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜும் புதன்கிழமை பணியிடமாற்றம் ஆக இருக்கிறார்.

இதனையொட்டி கிருஸ்துராஜுக்கு குறவர் இன மக்கள் தாங்கள் செய்த அழங்கார கூடைகளுடன் பூங்கொத்தை கொடுத்து நன்றி செலுத்தியதோடு, அவரை மீண்டும் கோவையிலேயே பணிமேற்கொள்ள வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...