கோவை மாவட்ட வங்கிகளுக்கு நடப்பாண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கடன் திட்டப் புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்திற்கு 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்ட வங்கிகள் 2023-2024ஆம் ஆண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.



இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலா ராவ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக 35,170 கோடிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 15,000 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு 18,850 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு 1320 கோடி என மொத்தம் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7470 கோடி அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து RSETI யில் பயிற்சி பெற்ற 5 நபர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...