உடுமலை உழவர் சந்தை முன்பு தேங்கிய மழைநீர் - பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி!

உடுமலை அருகேயுள்ள கபூர் கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்கியுள்ள நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் மண்ணை கொட்டி மூட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே கபூர் கான் வீதியில் உள்ள உழவர் சந்தைக்கு முன்பு தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

உடுமலையின் பிரதான சாலைகளில் ஒன்றான கபூர்கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதாலும் குறைந்த விலையில் புத்துணர்வான காய்கறிகள் கிடைக்கும் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த சாலை சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கும் உதவிகரமாக உள்ளது.

ஆனால் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தவில்லை. இதனால் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.



அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் சாலையில் பாதி அளவிற்கு தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வந்த விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதே போன்று நேதாஜி விளையாட்டு மைதானத்திலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நிர் தேங்கியுள்ள தாழ்வான பகுதியில் மண்ணை கொட்டி சீரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமலும் பொதுமக்கள் நடை பயிற்சியை தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கபூர்கான் சாலையில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கும், நேதாஜி விளையாட்டு மைதானத்தின் தாழ்வான பகுதியில் மண்ணைக்கொட்டி சீரமைப்பதற்கும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...