குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி தாக்குதல் - வேளாண் அதிகாரிகள் ஆய்வு!

உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் புதிய தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு சாகுபடி பரப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.



இந்தநிலையில் தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன்,

தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, விஞ்ஞானிகள்-வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கலையரசன், குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில் இலுப்ப நகரம் கிராமத்தில் தென்னந்தோப்புகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, தென்னை குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு குறித்து கண்டறிந்தனர். மேலும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....