மது குடிப்பதற்கான சிறப்பு அனுமதி அரசாணை - தமிழக அரசு திரும்பப்பெற டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெறகோரி மே.1 ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்குக்கு கையெழுத்து இடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதேபோல டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருகிறது.

இந்த சூழலில் தமிழக அரசு அரசாணையில் திருமண மண்டபங்களில் முன்அனுமதி உடன் மதுக்கள் பரிமாறலாம் என வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாலை சரத்துக்கள் மாற்றி மீண்டும் வெளியாகியது. இது மது விலக்குக்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் கடைகளை குறைக்க முயன்றனர். நேற்று வெளியாகிய அரசாணை தமிழக மக்களுக்கு எதிரானது. நேற்றைய அரசாணையை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த அரசாணை சர்வதேச அரங்கில் விளையாட்டுக்கு பதிலாக மது ஆசையை தூண்டிவிடுவதற்கு ஏதுவாக உள்ளது.12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெற வேண்டும். சாதிய சிக்கல்களில் இருந்து வெளியே முன்னேறி சென்றவர்களை மீண்டும் தலித் பட்டியலுக்குள் அடைப்பது அம்மக்களுக்கு எதிரானது.

தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தில் உள்ளது போல், தடுமாற்றத்தில் உள்ளது. ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பிவிட்டு குறை சொல்வார்கள். அரசு தடுமாறி அரசாணை வெளியிடுகிறது.

டாஸ்மாக்குக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான பேரணியில் ஒத்துழைக்க வேண்டும்.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துகிறோம். அதேபோல ஜி-ஸ்கொயர், அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவோடும், அரசு ஆதரவோடும் செயல்படுகிறது.

இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...