துடியலூரில் செயின்பறிப்பு - இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸ்

கோவை துடியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி (வயது43).

இவர் கடந்த மார்ச் 20ஆம் தேதி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் துடியலூர் தனிப்படை போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த முருகானந்தம் (வயது26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் வேறு எங்காவது செயின் பறிப்பில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...