கோவை இடிகரை மாரியம்மன் கோவில் திருச்சாட்டு திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை இடிகரை அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருச்சாட்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பூவோடு எடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: இடிகரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூவோடு எடுத்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோவை இடிகரையில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதில் மணியகாரம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலிலிருந்து கம்பம் அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிலையில், திருவிழாவின் முக்கிய விழாவான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கரகம் அழைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...