கோவை இடிகரை மாரியம்மன் கோவில் திருச்சாட்டு திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை இடிகரை அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருச்சாட்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பூவோடு எடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: இடிகரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூவோடு எடுத்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோவை இடிகரையில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதில் மணியகாரம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலிலிருந்து கம்பம் அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிலையில், திருவிழாவின் முக்கிய விழாவான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கரகம் அழைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...