தொடர் விடுமுறை எதிரொலி - உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை முறையாக போக்குவரத்தை கையாளாததால் பல மணி நேரமாக சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.


நீலகிரி: உதகைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவதால் காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் சாலைகளில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. உதகை காவல் துறையினர் முறையான திட்டமிடாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியதாவது, பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடங்களில் வர வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரமாக பயணம் செய்து வந்தோம். நகரில் முக்கிய சந்திப்புகளில் மட்டுமே போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற இடங்களில் போலீசார் இல்லாதது தான் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலைகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

நகரில் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில் சில சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...