பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விபத்து உள்ளிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விபத்து போன்ற அவசர காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து இது போன்ற சமூக நலப் பணிகளை தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...