திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கணபதி (55) கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த போது, திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை காண்பிக்க இறங்கிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). லாரி ஓட்டுநரான இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரியில் டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமலையம்பாளையம் அருகேயுள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுப்பதற்காக லாரியை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக லாரி ஓட்டுநர்கள் கணபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கணபதி மரணம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுக்க வந்த லாரி ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...