திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கணபதி (55) கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த போது, திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை காண்பிக்க இறங்கிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). லாரி ஓட்டுநரான இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரியில் டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமலையம்பாளையம் அருகேயுள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுப்பதற்காக லாரியை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக லாரி ஓட்டுநர்கள் கணபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கணபதி மரணம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுக்க வந்த லாரி ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...