உடுமலையில் ஏ.டி.எம் மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு - குடிமகன்கள் அட்டகாசம்!

உடுமலை அருகேயுள்ள பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளையின் ஏடிஎம் மையத்தின் முன் பக்க கண்ணாடியை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்த மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே பசுபதி வீதியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன்பக்க கண்ணாடியை மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் உள்ளது. இந்த வங்கி கிளையில், 500க்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ள தோடு, நகை கடன், பயிர் கடன் பெறவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று வழக்கம் போல் வங்கியை, அலுவலர்கள் மூடிச் சென்றனர். இன்று காலை திறக்க வந்த போது வங்கியின் முன் உள்ள ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது.

வங்கிக்கு எதிரில் பசுபதி வீதி யில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால், போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு, போதை ஆசா மிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

அரசு மதுபானக் கடையை மாற்ற வேண்டும். என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து,ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயற்சியின் காரணமாக, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...