கோவையில் மதநல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் - இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு!

கோவையில் ரமலான் பண்டிகையையொட்டி, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியே வருந்த இஸ்லாமியர்களுக்கு மடாதிபதி, பாதிரியார் உள்ளிட்டோர் பூ, குளிர்பானம், இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.



கோவை: கோவையில் மத நல்லிணக்க ரமலான் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமியர்கள், புனித மாதமான ரமலான் மாதத்தில் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.



பிறை பார்த்து இறை தொழுவும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையான இன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். கோவையில் உக்கடம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் ஆறத்தழுவி அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மத நல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.



ரமலான் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு இந்து மடாதிபதி, கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாமிய இமாம் என மும்மதத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் பூ, குளிர்பானம் தந்து, இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவையில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளை மத நல்லிணக்க பண்டிகைகளாக மூன்று மத பிரதிநிதிகளுடன் கொண்டாடும் நிலையில், இந்த வருடமும் மத நல்லிணக்க ரம்ஜான் கொண்டாடியதாக விழா ஏற்பாட்டாளரான பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரான ஹாஜி. ஜெ. முகமது ரஃபிக் தெரிவித்தார்.

சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாக, மதநல்லிணக்கம் பேணி அமைதி நிலை ஏற்பட்டு, மக்கள் எல்லா வளமும் நலமும் பெற பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற மத நல்லிணக்க பண்டிகையை கொண்டாடுவதாகவும், மதங்கள் வேறாயினும் மனம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த மதநல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...