கோவையில் மதநல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் - இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு!

கோவையில் ரமலான் பண்டிகையையொட்டி, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியே வருந்த இஸ்லாமியர்களுக்கு மடாதிபதி, பாதிரியார் உள்ளிட்டோர் பூ, குளிர்பானம், இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.



கோவை: கோவையில் மத நல்லிணக்க ரமலான் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமியர்கள், புனித மாதமான ரமலான் மாதத்தில் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.



பிறை பார்த்து இறை தொழுவும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையான இன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். கோவையில் உக்கடம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் ஆறத்தழுவி அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மத நல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.



ரமலான் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு இந்து மடாதிபதி, கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாமிய இமாம் என மும்மதத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் பூ, குளிர்பானம் தந்து, இனிப்பு வழங்கி உபசரித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவையில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளை மத நல்லிணக்க பண்டிகைகளாக மூன்று மத பிரதிநிதிகளுடன் கொண்டாடும் நிலையில், இந்த வருடமும் மத நல்லிணக்க ரம்ஜான் கொண்டாடியதாக விழா ஏற்பாட்டாளரான பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரான ஹாஜி. ஜெ. முகமது ரஃபிக் தெரிவித்தார்.

சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாக, மதநல்லிணக்கம் பேணி அமைதி நிலை ஏற்பட்டு, மக்கள் எல்லா வளமும் நலமும் பெற பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற மத நல்லிணக்க பண்டிகையை கொண்டாடுவதாகவும், மதங்கள் வேறாயினும் மனம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த மதநல்லிணக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...