கிணத்துக்கடவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை - பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் 6 பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா சூலக்கல் பகுதியில் பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது.



இதையடுத்து, சூலக்கல் பகுதியில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், இன்பரசன், ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் பெட்டி கடைகள், பேக்கரிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை விற்பனை செய்ததும், கடைகள் முன்பு புகைப்பிடிக்க அனுமதி அளித்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் 6 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...