பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பால் விற்பனையாளர் - கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்காக சிகிச்சை பெற்றுவந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பால் விற்பனையாளர் விஜயகுமார் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராசக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). பால் விற்பனையாளர். இவர் கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு பதுங்யிகிருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, மருந்துவர்கள் பரிந்துரையை ஏற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...