தாராபுரத்தில் பழமையான வேப்ப மரம் வெட்டிச் சாய்ப்பு - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.


திருப்பூர்: தாராபுரம் சி.எஸ்.ஐ. நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையோரம் இருந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு நிழல் தந்துவந்தது. இந்த மரத்தின் நிழலில் அப்பகுதி பொதுமக்கள் இளைப்பாரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வேப்பமரத்தை ஒரு சிலர் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். பொதுவாக வருவாய்த்துறையினர் முன்அனுமதி பெற்று மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், தாராபுரம் பகுதியில் பல இடங்களில் இது போன்ற மரங்களை வெட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.



தமிழக அரசு வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 50ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவது கொடூரமான செயல் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாராபுரம் வருவாய் துறையினர் சாலை மற்றும் தெருவோரம் உள்ள மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



50 வயதான இந்த வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது,

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...