தாராபுரத்தில் பழமையான வேப்ப மரம் வெட்டிச் சாய்ப்பு - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.


திருப்பூர்: தாராபுரம் சி.எஸ்.ஐ. நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையோரம் இருந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு நிழல் தந்துவந்தது. இந்த மரத்தின் நிழலில் அப்பகுதி பொதுமக்கள் இளைப்பாரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வேப்பமரத்தை ஒரு சிலர் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். பொதுவாக வருவாய்த்துறையினர் முன்அனுமதி பெற்று மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், தாராபுரம் பகுதியில் பல இடங்களில் இது போன்ற மரங்களை வெட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.



தமிழக அரசு வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 50ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவது கொடூரமான செயல் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாராபுரம் வருவாய் துறையினர் சாலை மற்றும் தெருவோரம் உள்ள மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



50 வயதான இந்த வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது,

Newsletter

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...