தாராபுரத்தில் பழமையான வேப்ப மரம் வெட்டிச் சாய்ப்பு - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.


திருப்பூர்: தாராபுரம் சி.எஸ்.ஐ. நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையோரம் இருந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு நிழல் தந்துவந்தது. இந்த மரத்தின் நிழலில் அப்பகுதி பொதுமக்கள் இளைப்பாரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வேப்பமரத்தை ஒரு சிலர் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். பொதுவாக வருவாய்த்துறையினர் முன்அனுமதி பெற்று மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், தாராபுரம் பகுதியில் பல இடங்களில் இது போன்ற மரங்களை வெட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.



தமிழக அரசு வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 50ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவது கொடூரமான செயல் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாராபுரம் வருவாய் துறையினர் சாலை மற்றும் தெருவோரம் உள்ள மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



50 வயதான இந்த வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது,

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...