கல்வியும், மருத்துவமும் இலவசாமாக வழங்கப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாநகர, கிழக்கு மண்டல முதல் மாநாடு சிங்காநல்லூர் அருகே உள்ள சக்கரை செட்டியார் நகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டினை பிரவீன் கொடியேற்றி துவங்கி வைத்தார்.

இம்மாநாட்டிற்கு எஸ்.ஆறுமுகம், கே.சி.மூர்த்தி, ஆர்.ஜீவபாரதி ஆகியோர் தலைமை வசித்தனர். ஜி.பி.சக்திவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கே.புருசோத்தமன் மற்றும் வே.வசந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பாலசந்திரன், பி.முருகன், வெ.ஜீவானந்தம், ச.பூர்ணிமா நந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக ஆர்.பிரகாஷ், செயலாளராக எஸ்.ஆறுமுகம், பொருளாளராக எம்.மணிகண்டன், துணைத்தலைவர்களாக ச.பூர்ணிமா நந்தினி, ஜே.ஸ்டாலின், வி.நாகராஜ், துணைச் செயலாளராக எம்.வீரசீனு, கே.காளிதாஸ், ஏ.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசாமாக வழங்கப் படவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹோப் காலேஜ், சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும். 



மேலும், கிழக்கு மண்டலப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே கடவில் உள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...