நான் இறக்க போகிறேன்.. இறுதி விருப்பம் நிறைவேற உதவுங்கள்..! - கேரள பெண்ணின் பதிவுக்கு சத்குருவின் பதில்!

கேராவை சேர்ந்த காயத்ரி என்ற பெண், தான் இறக்கப் போவதாகவும், தனது கடைசி விருப்பமாக சத்குருவை சந்திக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள சத்குரு நான் வெளிநாட்டில் இருப்பதாகவும், நாடு திரும்பும் போது தங்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.


கோவை: தான் இறக்கப்போவதாக டுவிட்டரில் பதிவிட்ட இளம்பெண்ணுக்கு சத்குருவின் பதில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக வலைதளங்கள்‌ வெறும்‌ கேளிக்கைகளுக்கானது என்பதைத்‌ தாண்டி சில நேரங்களில்‌ நம்‌ நெஞ்சை தொட்டு விடும்‌ சம்பவங்களையும்‌ நடத்தி விடுகிறது. அந்த வகையில்‌ ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்‌ ட்விட்டர்‌ மூலம்‌ நடந்தேறி இருக்கிறது.

காயத்ரி என்ற பெண்மணி தன்‌ இறுதி விருப்பம்‌ குறித்த பதிவொன்றை டிவிட்டரில்‌ பதிவிட்டு இருந்தார்‌. அதில்‌ அவர்‌ "சத்குரு அவர்களை சந்திப்பது என்பது என்‌ வாழ்நாள்‌ விருப்பமாக இருந்து வருகிறது. நான்‌ வாழ்வதற்கு இன்னமும்‌ சில மாதங்கள்‌ மட்டுமே எஞ்சி இருக்கிறது என நவீன அறிவியல்‌ சொல்கிறது. யாரேனும்‌ நான்‌ என்‌ குருவை சந்திக்க உதவ முடியுமா? என்‌ இறுதி விருப்பம் நிறைவேற தயவுசெய்து உதவி செய்யுங்கள்‌." என்று பதிவிட்டுள்ளார்‌.

அந்த பெண்ணின்‌ உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு பதில்‌ அளித்துள்ளார்‌. அவர்‌ பதிவிட்டுள்ள ட்வீட்டில்‌ கூறியிருப்பதாவது, வணக்கம்‌ காயத்ரி. நான்‌ தற்போது பாரதத்திற்கு வெளியே பயணத்தில்‌ இருக்கிறேன்‌.

உணர்வளவில்‌ நான்‌ உங்களுடன்‌ இருக்கிறேன்‌. திரும்பும் போது உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்‌. மிகுந்த அன்பும்‌ ஆசியும்‌ " என்று அவர்‌ பதிவிட்டுள்ளார்‌.

இந்த சம்பவம்‌ சமூக வலைத்தளங்களில்‌ பலரின்‌ வரவேற்பையும்‌, பாராட்டுகளையும்‌ பெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...