கோவையில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பேட்டரிகள் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!

நல்லாம்பாளையம் அடுத்த சங்கனூர் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் இருந்த யூபிஎஸ் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நல்லாம்பாளையம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லாம்பாளையத்தை அடுத்த சங்கனூர் சாலையில் சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் அறையில் இருந்த சுமார் ரூ.6,000 மதிப்புள்ள யூ.பி.எஸ் பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வங்கி மேலாளர் அரவிந்த், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...