கோவை துடியலூரியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தில் துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீர், மோர் குடித்து தாகத்தை தணித்துக் கொண்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோடை வெயிலில் வெப்பத்தை தவிர்க்க ஆண்டுதோறும் அசோகபுரம் பகுதி பொதுமக்களுக்கு அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதில் அப்பகுதி பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் என நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சிவகுமார், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அசோக் குமார், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், விஜயன், மோகன் குமார், நவநீதகிருஷ்ணன், பிரதாப், பிரேம்குமார், சங்கர், கனகராஜ், வடிவேல், பிரதீப் ராஜ், வீரா, தீனதயாளன், புஷ்பராஜ், சம்பத்குமார், பாலமுருகன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...