பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை சார் ஆட்சியர் பிரியாங்காவிடம் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பத்து கிராமங்களில் இருக்கும் மொத்த கழிவு நீரும் அருகில் இருக்கும் பல ஏக்கர் விளை நிலத்தில் தேங்கி நிற்பதால் கிணற்று நீர் மாசடைவதாகவும், கால்நடைகள் நோய்வாய்படுவதாகவும், அங்கு உள்ள தென்னை மரங்கள் பட்டுபோவதாகவும், அருகில் உள்ள கிராம மக்கள் வியாதிகளுக்கு உள்ளாவதாகவும் கூறி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் மழை காலம் துவங்கினால் மீண்டும் விளை நிலத்தில் கழிவு நீர் புகுந்து சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதை விசாரித்த சார் ஆட்சியர் பிரியங்கா போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...