சிறைவாசிகள் 27 பேருக்கு தொழிற்பயிற்சி நிறைவு சான்றிதழ்

சிறைவாசிகளுக்காக கோவை மத்திய சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சி முடித்த 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: தமிழக சிறை துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தொழில் தொடங்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிலையம் மூலம், மத்திய சிறைவாசிகளுக்கு ஏசி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.



அதில் பயிற்சி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சிறைவாசிகள் கணினி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 20 கணிப்பொறிகள் கொண்ட கணினி பயிற்சி மையத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...