தாராபுரம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகிலுள்ள பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.

இ்ந்த விபத்தில் வேனின் கேபினில் இருந்த டிரைவர் கணேசன் மற்றும் பவுன் ரிச்சர்ட், மணிகண்டன், மதன்குமார் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.



உடனே, கேபின் கதவை உடைத்து அவர்கள் 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் காயம் அடைந்தார். உடனே அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் விபத்து குறித்து அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் வேன் ஓட்டுநர் கணேசன் ஆகியோரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...