தாராபுரம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகிலுள்ள பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.

இ்ந்த விபத்தில் வேனின் கேபினில் இருந்த டிரைவர் கணேசன் மற்றும் பவுன் ரிச்சர்ட், மணிகண்டன், மதன்குமார் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.



உடனே, கேபின் கதவை உடைத்து அவர்கள் 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் காயம் அடைந்தார். உடனே அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் விபத்து குறித்து அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் வேன் ஓட்டுநர் கணேசன் ஆகியோரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...