தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் - திருவிழாக்கோலம் பூண்ட சுற்றுலா தலங்கள்!

தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளதால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிப்பதற்காக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கி உள்ளது.



இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.



குறிப்பாக தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களை காண குவிந்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தை சார்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் உதகைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அவற்றை போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் சீர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...